Friday, November 6, 2020

 

சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்

       (ஆதிசங்கரர் நக்ஷத்திரங்களின் எண்ணிக்கையைக் கொண்டு 27 சுலோகங்களில் சிவபெருமானின் பெருமையை விளக்குகிறார். ஒவ்வொரு சுலோகத்தின் நான்கடிகளிலும் ‘நமச்சிவாய’ என்று கூறுவதால் 108 முறை இம்மந்திரத்தை உச்சரிக்கும் புண்ணியம் கிடைக்கும் வகையில் இந்த ஸ்தோத்திரத்தை அமைத்திருக்கிறார்.)

 ஸ்ரீமதா3த்மனே கு3ணைகஸிந்த4வே நம: சிவாய

       தா4மலேசதூ4 தகோகப3ந்த4வே நம: சிவாய |

நாமசேஷிதாநமத்34வாந்த4வே நம: சிவாய

       பாமரேதரப்ரதா4னப3ந்த4வே நம: சிவாய ||                               1

     பரமாத்மாவாகவும் குணப்பெருங்கடலாகவும் உள்ன சிவனுக்கு வணக்கம்; எவனுடைய ஒளிக்கீற்றினால் சூரியனே ஒதுக்கப்படுகின்றானோ அந்த சிவனுக்கு வணக்கம்; நிலையற்ற உலகவாழ்வாகிற பாழுங்கிணறு எவனுடைய பக்தர்களுக்கு இல்லை என்று ஆகிவிடுகிறதோ அந்த சிவனுக்கு வணக்கம்; மெய்ஞானம் பெற்ற மேன்மக்களுக்கு தலையாய சுற்றமாய் இருக்கிற சிவனுக்கு வணக்கம்.

 காலபீ4தவிப்ரபா3லபால தே நம: சிவாய

       சூலபி4ன்னது3ஷ்டத3க்ஷபா2ல தே நம: சிவாய |

மூலகாரணாய காலகால தே நம: சிவாய

       பாலயாது4 நா த3யாலவால தே நம: சிவாய ||                          2

    யமனைக்கண்டு அஞ்சிய அந்தணச் சிறுவனை (மார்க்கண்டேயனை) க் காத்த சிவனுக்கு வணக்கம்; எவனுடைய சூலத்தினால் கொடிய தக்கனுடைய தலை பிளக்கப்பட்டதோ அந்த சிவனுக்கு வணக்கம்; அனைத்திற்கும் மூலகாரணனாயும், காலனாகிற யமனுக்கும் காலனாகவும் இருக்கும் சிவனுக்கு வணக்கம்; அருளுக்கிருப்பிடமானவனே இன்றே காத்தருள்; சிவனாகிய உமக்கு வணக்கம்.

 இஷ்டவஸ்து முக்2யதா3ன ஹேதவே நம: சிவாய

       து3ஷ்ட தை3த்யவம்ச தூ4மகேதவே நம: சிவாய |

ஸ்ருஷ்டி ரக்ஷணாய 4ர்மஸேதவே நம: சிவாய

       அஷ்டமூர்த்தயே வ்ருஷேந்த்3ரகேதவே நம: சிவாய ||                   3

      வேண்டிய பொருளை சிறப்பாகத் தரு வோனாகிய சிவனுக்கு வணக்கம்; கொடிய அரக்கர் குலத்தை அழிக்கும் நெருப்பாக இருக்கின்ற சிவனுக்கு வணக்கம்; சிருஷ்டித் தொழிலையும் காத்தல் தொழிலையும் செய்து கொண்டு அறநெறியெனும் பாலமாக அமைந்துள்ள சிவனுக்கு வணக்கம்; (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், இயமானன், சந்திரன், சூரியன் ஆகிய) எட்டு உருவங்களைக் கொண்டவனாயும் இடபக்கொடியை உடையவனாயும் உள்ள சிவனுக்கு வணக்கம்.

 ஆபத3த்3ரிபே43 டங்க ஹஸ்த தே நம: சிவாய

       பாபஹாரிதி3வ்யஸிந்து4 மஸ்த தே நம: சிவாய |

பாபதா3ரிணே லஸந்நமஸ்ததே நம: சிவாய

       சாபதோ3ஷ க3ண்டனப்ரசஸ்த தே நம: சிவாய ||                        4

       இன்னலெனும் மலையை வெட்டித் தள்ளும் உளியாகிற (அபய) கரத்தை உடைய சிவனுக்கு வணக்கம்; பாவங்களைப் போக்கும் ஆகாய கங்கையைத் தலையிலுடைய சிவனுக்கு வணக்கம்; பாவங்களைப் போக்குகின்றவனாயும், நம: நம: என்று தொடர்ந்து வணங்கப்படுகின்றவனாயும் உள்ள சிவனுக்கு வணக்கம்; சாபங்களால் ஏற்படும் குற்றங்களைக் கடிவதில் புகழ் மிக்கவனான சிவனுக்கு வணக்கம்.

 வ்யோமகேச தி3வ்யப4வ்ய ரூப தே நம: சிவாய

       ஹேமமேதி3நீத4 ரேந்த்3ரசாப தே நம: சிவாய |

நாமமாத்ரத3க்34 சர்வபாப தே நம: சிவாய

       காமனை கதானஹ்ருத்3து3ராப தே நம: சிவாய ||                       5

       ஆகாயத்தையே செஞ்சடையாக உடையவனும், திவ்யமங்கள ரூபனாயும் உள்ள சிவனுக்கு வணக்கம்; பொன் மலையாகிற மேருவை வில்லாக உடைய சிவனுக்கு வணக்கம்; எவனுடைய பெயரைச் சொன்ன மாத்திரத்தில் அனைத்துப் பாவங்களும் பொசுக்கப்படுகின்றனவோ அந்த சிவனுக்கு வணக்கம். பொருள் வேட்கையிலே நாட்டம் கொண்ட இதயத்தோரால் அடையமுடியாத அச் சிவனுக்கு வணக்கம்.

 ப்3ரம்ஹ மஸ்தகாவலீநிப3த்34 தே நம: சிவாய

       ஜிம்ஹகே3ந்த்2ரகுண்டலப்ரஸித்34 தே நம: சிவாய |

ப்3ரம்ஹணே ப்ரணீத வேத3 பத்34தே நம: சிவாய

       ஜிம்ஹகாலதே3ஹத3 த்தபத்34 தே நம: சிவாய ||                       6

     பிரமனின் மண்டையோடுகளை மாலையாக அணிந்துள்ள சிவனுக்கு வணக்கம்; சிறந்த நாகங்களை குண்டலமாக அணிவதில் பிரசித்தனான சிவனுக்கு வணக்கம்; பிரம்மாவின் பொருட்டு வேத நெறிமுறையை வகுத்த சிவனுக்கு வணக்கம்; கோணல் புத்தியுள்ள யமனுடைய உடலைக் காலாலுதைத்த சிவனுக்கு வணக்கம்.

காமநாசனாய சுத்34 கர்மணே நம: சிவாய

       ஸாமகா3ன ஜாயமானசர்மணே நம: சிவாய |

ஹேமகாந்தி சாகசக்யவர்மணே நம: சிவாய

       ஸாமஜாஸுராங்க3லப்34 சர்மணே நம: சிவாய ||                       7

      காமனைக் காய்ந்தவனும் தூய்மைப்படுத்தும் செயல்களைச் செய்கின்றவனுமான சிவனுக்கு வணக்கம்; சாமவேத கானத்தால் மகிழ்கின்ற சிவனுக்கு வணக்கம்; பொன்னொளியின் மினுமினிப்பால் சூழப்பட்ட சிவனுக்கு வணக்கம்; கஜாசுரனின் அங்கத்தினின்றும் பெறப்பட்ட தோலை (அணிந்தவனுக்கு) வணக்கம்.

 ஜன்மம்ருத்யுகோ4ரது: க2ஹாரிணே நம: சிவாய

       சின்மயை கரூபதே3ஹதா4ரிணே நம: சிவாய |

மன்மனோரதா2வபூர்த்தி காரிணே நமசிவாய

       ஸன்மனோக3தாய காமவைரிணே நம: சிவாய ||                       8

   பிறப்பிறப்பென்னும் கோரமான துக்கத்தைப் போக்குகின்ற சிவனுக்கு வணக்கம்; ஞானமே உருவான உடலைத் தாங்கியுள்ள சிவனுக்கு வணக்கம்; எனது எண்ணத்தை நிறைவேற்றுகின்ற சிவனுக்கு வணக்கம்; நன்மக்களின் உள்ளத்தில் உறைபவனும் மன்மதனின் எதிரியுமாகிய சிவனுக்கு வணக்கம்.

 யக்ஷராஜப3ந்த4வே த3யாலவே நம: சிவாய

       3க்ஷபாணிசோபி4 காஞ்சனாலவே நம: சிவாய |

பக்ஷிராஜவாஹஹ்ருச்ச2 யாலவே நம: சிவாய

       அக்ஷபா2ல வேதபூததாலவே நம: சிவாய ||                              9

       குபேரனுக்குச் சுற்றமாயும் அருள்புரிவோனாயுமுள்ள சிவனுக்கு வணக்கம்; வலது கரத்தில் விளங்கும் பொற்குடுவையை உடைய சிவனுக்கு வணக்கம்; கருடவாகனனாகிய திருமாலின் இதயத்தில் சயனித்திருக்கும் சிவனுக்கு வணக்கம்; நெற்றிக்கண்ணையும், வேதமோதுவதால் புனிதமான வாயையும் பெற்ற சிவனுக்கு வணக்கம்.

 3க்ஷஹஸ்தநிஷ்ட2 ஜாதவேத3ஸே நம: சிவாய

       அக்ஷராத்மனே நமத்3பி3டெள3ஜஸே நம: சிவாய |

தீ3க்ஷிதப்ரகாசிதாத்மதேஜஸே நம: சிவாய

       உக்ஷராஜவாஹதேஸதாம் க3தே நம: சிவாய ||                         10

       வலக்கரத்தில் அழலேந்திய சிவனுக்கு வணக்கம்; நித்திய பரமாத்மாவும் இந்திரனால் வணங்கப்பெற்றவருமான சிவனுக்கு வணக்கம்; தீக்கை பெற்றவர்களிடத்தே தன் பேரொளியைப் பிரகாசிக்கச் செய்யும் சிவனுக்கு வணக்கம்இடப வாகனனும், நன்மக்களுக்குப் புகலிடமாயும் இருக்கும் சிவனுக்கு வணக்கம்.

ராஜதாசலேந்த்3ரஸா நுவாஸினே நம: சிவாய

       ராஜமானநித்யமந்த3 ஹாஸினே நம: சிவாய |

ராஜகோரகாவதம்ஸ பா4ஸினே நம: சிவாய

       ராஜராஜமித்ரதாப்ரகாசினே நம: சிவாய ||                               11

      வெள்ளியங்கிரியின் பக்கலில் வசிக்கின்ற சிவனுக்கு வணக்கம்; பிரகாசிக்கின்றவனும் என்றும் புன் சிரிப்புடன் கூடியவனுமான சிவனுக்கு வணக்கம்சந்திரப்பிறையைத் தலையில் சூடியவனான ஒளிபொருந்திய சிவனுக்கு வணக்கம்குபேரனிடம் நட்பிலே பிரகாசிக்கும் சிவனுக்கு வணக்கம்.

 தீ3னமானவாலிகாமதே4னவே நம: சிவாய

       ஸூனபா3ண தா3ஹக்ருத்க்ருசானவே நம: சிவாய

ஸ்வாநுராக34க்தரத்னஸாநவே நம: சிவாய

       தா3னவாந்த4 காரசண்ட3பா4னவே நம: சிவாய ||                        12

       இரக்கத்திற்குரிய மக்கட் சமூகத்திற்கு காமதேனுவாக விளங்கும் சிவனுக்கு வணக்கம்; மலர்க்கணைகளை உடைய (மன்மதனை) எரியூட்டிய அக்கினியாய சிவனுக்கு வணக்கம்; தன்னிடத்து அன்பு செலுத்தும் பக்தர்களுக்கு மேரு மலை போன்றிருக்கும் சிவனுக்கு வணக்கம்; அரக்கரெனும் இருளைப் போக்கும் சூரியனாக விளங்கும் சிவனுக்கு வணக்கம்.

 ஸர்வமங்க3ளாகுசாக்3ரசாயிநே நம: சிவாய

       ஸர்வதே3வதாக3ணாதிசாயிநே நம: சிவாய |

பூர்வதே3 வநாசஸம்விதா4யிநே நம: சிவாய

       ஸர்வமன்மனோஜப3ங்கதா3யிநே நம: சிவாய ||                         13

    'ஸர்வமங்களா' என்னும் பார்வதி தேவியின் மார்பகத்திலே சயனித்துக் கொண்டிருக்கும் சிவனுக்கு வணக்கம்; எல்லா தேவதை கணங்களுக்கும் மேம்பட்டவனான சிவனுக்கு வணக்கம்; அசுரகுலத்தை அழித்த சிவனுக்கு வணக்கம்; காமத்தின் விளைவுகளனைத்தையும் முறியடிக்கின்ற சிவனுக்கு வணக்கம்.

 ஸ்தோகப4க்திதோsபி ப4க்தபோஷிணே நம: சிவாய

       மாகரந்த3ஸார வர்ஷிபா4ஷிணே நம: சிவாய |

ஏகபி3ல்வதா3னதோSபி தோஷிணே நம: சிவாய

       நைகஜன்மபாபஜால சோஷிணே நம: சிவாய ||                         14

    சிறிதளவு பக்தி இருந்தாலும் அத்தகைய பக்தர்களைப் போஷிக்கின்ற சிவனுக்கு வணக்கம்; தேன்ரசத்தைப் பிலிற்றும் இன்சொல்லை உடைய சிவனுக்கு வணக்கம்; ஒரு வில்வத்தை அளித்தாலும் அதனால் மகிழ்கின்ற சிவனுக்கு வணக்கம்; அனேக பிறப்புக்களில் சேர்ந்த பாபக்கூட்டத்தை வற்றச் செய்யும் சிவனுக்கு வணக்கம்.

 ஸர்வஜீவரக்ஷணைகசீலினே நம: சிவாய

       பார்வதீப்ரியாய ப4க்தபாலினே நம: சிவாய |

துர்வித3க்34தை3த்ய ஸைந்ய தா3ரிணே நம: சிவாய

       சர்வரீசதா4ரிணே கபாலினே நம: சிவாய ||                              15

       எல்லா உயிர்களையும் காப்பதையே நெறியாகக் கொண்ட சிவனுக்கு வணக்கம்; பார்வதியிடத்தில் பிரியமுள்ளவனும் பக்தர்களைக் காத்தருள்பவனுமான சிவனுக்கு வணக்கம்; கொடிய அசுர சேனைகளை அழித்த சிவனுக்கு வணக்கம்; இரவின் நாயகனான சந்திரனையும், கபாலத்தையும் தரித்துள்ள சிவனுக்கு வணக்கம்.

 பாஹி மாம் உமாமனோஜ்ஞதே4ஹ தே நம: சிவாய

       தேஹி மே வரம் ஸிதாத்3ரிகே3ஹதே நம: சிவாய |

மோஹிதர்ஷிகாமினீஸமூஹ தே நம: சிவாய

       ஸ்வேஹிதப்ரஸந்ந காமதோ3ஹ தே நம: சிவாய ||                    16

     உமையோடு கூடியதான அழகிய தேகத்தை உடையவனே என்னைக் காப்பாற்று; சிவனாகிய உமக்கு வணக்கம்; வெண் (பனி) மலையில் வசிப்போனே! எனக்கு வரமருள்வாய். சிவனாகிய உமக்கு வணக்கம்; ரிஷிபத்தினிக் கூட்டத்தை மோகமறச் செய்தவனே, சிவனாகிய உமக்கு வணக்கம்; நீர் விரும்பியதை யெல்லாம் முடிப்பதனால் பிரசன்னனாயிருக்கிறீர், வேண்டியதையெல்லாம் தருகின்றவனாகிய சிவனாம் உமக்கு வணக்கம்.

 மங்க3ளப்ரதா3ய கோ3துரங்க3 தே நம: சிவாய

       3ங்க3யா தரங்கி3தோத்தமாங்க3 தே நம: சிவாய

ஸங்க3ரப்ரவ்ருத்தவைரிப4ங்க3தே நம: சிவாய

       அங்க3 ஜாரயே கரேகுரங்க3தே நம: சிவாய ||                            17

    விரைவாகச் செல்லும் இடபத்தை உடையவனே! மங்களத்தைத் தருபவனான சிவனுக்கு வணக்கம்; கங்கையின் அலைபாயும் முடியை உடையவனே! சிவனாகிற உமக்கு வணக்கம்; போரில் ஈடுபட்ட எதிரிகளை ஒடுக்கியவனே; சிவனாகிற உமக்கு வணக்கம்; மன்மத விரோதியே, மானேந்திய கையனே, சிவனாகிற உமக்கு வணக்கம்.

 ஈஹிதக்ஷணப்ரதா3ன ஹேதவே நம: சிவாய

       ஆஹிதாக்னிபாலகோக்ஷகேதவே நம: சிவாய

தே3ஹகாந்திதூ4தரெளப்யதா4தவே நம: சிவாய

       கே3ஹது: க2புஞ்ஜதூ4மகேதவே நம: சிவாய ||                           18

 வேண்டியதை அக்கணத்திலேயே தரவல்லவனாகிய சிவனுக்கு வணக்கம்; தீயோம்பவோரைக் காப்பவனும் இடபக்கொடியோனுமாகிய சிவனுக்கு வணக்கம்; தனது தேககாந்தியினால் வெள்ளி உலோகத்தை வெல்லக்கூடிய சிவனுக்கு வணக்கம்; இல்வாழ்வின் துக்கத் தொகுதியினை அழிக்கும் தீயாகிய சிவனுக்கு வணக்கம்.

 த்ர்யக்ஷ தீ3னஸக்த்ருபாகடாக்ஷ தே நம: சிவாய

       3க்ஷஸப்ததந்து நாசத3க்ஷ தே நம: சிவாய |

ருக்ஷராஜபா4நுபாவகாக்ஷ தே நம: சிவாய

       ரக்ஷ மாம் ப்ரபந்நமாத்ர ரக்ஷ தே நம: சிவாய ||                        19

      முக்கண்ணனே, எளியவருக்கு நன்மை பயக்கும் வண்ணம் திருவருட் பார்வையை நல்கும் சிவனுக்கு வணக்கம்; தக்கன் வேள்வியை அழிப்பதில் சமர்த்தனான சிவனுக்கு வணக்கம்; சந்திரன் சூரியன், அக்கினி ஆகியவற்றை (முக்) கண்களாக உடைய சிவனுக்கு வணக்கம்; சரணடைந்த மாத்திரத்தே காத்தருளுகின்றவனே, என்னைக் காத்தருள்வாயாக; சிவனாகிய உமக்கு வணக்கம்.

 ந்யங்குபாணயே சிவங்கராய தே நம: சிவாய

       ஸங்கடாப்3தி4தீர்ண கிங்கராய தே நம: சிவாய |

கங்கபீ4ஷிதாப4யங்கராய தே நம: சிவாய

       பங்கஜாநநாய சங்கராய தே நம: சிவாய ||                              20

      மானைக் கையில் தாங்குபவனே, மங்களத்தைச் செய்கின்ற சிவனாகிய உமக்கு வணக்கம்; இடரெனும் கடலைக் கடத்துவிப்பதில் பணியாளெனப் பணியாற்றும் சிவனுக்கு வணக்கம்; யமனிடம் அஞ்சுவோருக்கு அபயம் தருகின்ற சிவனுக்கு வணக்கம்; தாமரை போன்ற அழகிய முகத்தை உடையவனும் நல்லனவற்றையே செய்பவனுமான சிவனுக்கு வணக்கம்.

 கர்மபாசநாச நீலகண்ட2 தே நம: சிவாய

       சர்மதா3ய வர்யப4ஸ்ம கண்ட2தே நம: சிவாய |

நிர்மமர்ஷிஸேவிதோபகண்ட2 தே நம: சிவாய

       குர்மஹே நதீர் நமத்3வகுண்ட2 தே நம: சிவாய ||                       21

   கருமமெனும் பாசத்தை நாசம் செய்பவனும் திருநீலகண்டனுமான சிவனுக்கு வணக்கம்; சுகத்தை அளிப்பவனும் மன்மதன் சாம்பலை கண்டத்தில் அணிந்தவனுமான சிவனுக்கு வணக்கம்; 'எனது' என்ற பற்றற்ற ரிஷிகளால் அருகேயிருந்து சேவிக்கப்படுகின்ற சிவனுக்கு வணக்கம்; வணங்குவோரிடத்து சோம்பலின்றி (அருள்பவனாக) உள்ளவனே, உமக்கு வணக்கம் பல சிவனாகிய உமக்கு வணக்கம்.

 விஷ்டபாதி4பாய நம்ரவிஷ்ணவே நம: சிவாய

       சிஷ்டவிப்ரஹ்ருத3கு3ஹாசரிஷ்ணவே நம: சிவாய |

இஷ்டவஸ்துநித்யதுஷ்டஜிஷ்ணவே நம: சிவாய

       கஷ்டநாசனாய லோகஜிஷ்ணவே நம: சிவாய ||                        22

   தேவலோகத்ததிபனும் விஷ்ணுவால் வணங்கப்படுகின்றவனுமான சிவனுக்கு வணக்கம்; ஒழுக்கத்தில் சிறந்த அந்தணர்களின் இதயக்குகையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சிவனுக்கு வணக்கம்; வேள்வியில் இட்ட பொருளை ஏற்று என்றும் மகிழ்கின்றவனும் அனைத்தையும் வென்றவனுமான சிவனுக்கு வணக்கம்; இடர்களைவோனும் உலகியலை வென்றவனுமான சிவனுக்கு வணக்கம்.

 அப்ரமேய தி3வ்யஸுப்ரபா4வதே நம: சிவாய

       ஸத்ப்ரபன்னரக்ஷணஸ்வபா4வ தே நம: சிவாய |

ஸ்வப்ரகாச நிஸ்துலானுபா4வ தே நம: சிவாய

       விப்ரடி3ம்ப43ர்சிதார்த்3ரபாவ தே நம: சிவாய ||                         23

       அளவிடற்கரியனும், திவ்யமான நற்பெருமையுடையவனுமான சிவனுக்கு வணக்கம்; அடைக்கலமடைந்த நல்லோர்களைக் காக்கும் இயல்பை உடைய சிவனுக்கு வணக்கம்; சுயம்பிரகாசமாயும் இணையற்ற வீரியம் உடையவனாயும் இருக்கிற சிவனுக்கு வணக்கம்; அந்தணச் சிறுவனுக்கு (மார்க்கண்டேயனுக்கு) அருட்பான்மை காட்டிய சிவனுக்கு வணக்கம்.

 ஸேவகாய மே ம்ருட3 ப்ரஸீத3 தே நம: சிவாய

       பா4வலப்4ய தாவகப்ரஸாத3 தே நம: சிவாய |

பாவகாக்ஷ தேவபூஜ்யபாத3 தே நம: சிவாய

       தாவகாங்க்4ரி ப4க்த த3த்தமோத3 தே நம: சிவாய ||                     24

    கருணாமூர்த்தியே, அடியேனாகிய எனக்கு அருள்புரிய வேண்டும். சிவனாகிய உமக்கு வணக்கம்; பக்தியினால் பெறக்கூடியது உமது அருள்; சிவனாகிய உமக்கு வணக்கம்; அக்கினிக் கண்ணனே, தேவர்கள் வழிபடும் திருவடியுடையோனே, சிவனாகிய உமக்கு வணக்கம்; தங்கள் திருவடிப்பேற்றினால் பக்தர்களை மகிழ்விப்பவனே, சிவனாகிய உமக்கு வணக்கம்.

 பு4க்தி முக்தி தி3வ்யபோ4கதா3யினே நம: சிவாய

       சக்திகல் பிதப்ரபஞ்சபா4கி3னே நம: சிவாய

4க்தஸங்கடாபஹாரயோகி3னே நம: சிவாய

       யுக்தஸந்மனஸ்ஸரோஜயோகி3னே நம: சிவாய ||                      25

      இம்மையின்பம், முக்தியின்பம், தேவலோக இன்பம் ஆகியவற்றை அருளும் சிவனுக்கு வணக்கம்; (தனது மாயா) சக்தியால் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்சத்தை உடையவனான சிவனுக்கு வணக்கம்; பக்தர்களின் இடர்களைப் போக்குவதில் ஈடுபட்டுள்ள சிவனுக்கு வணக்கம். யோக நெறியில் நிற்கும் மேன்மக்களின் மனமாகிற தாமரையில் பொருந்தியிருக்கும் சிவனுக்கு வணக்கம்

 அந்தகாந்தகாய பாபஹாரிணே நம: சிவாய

       சந்தமாய த3ந்திசர்மதா4ரிணே நம: சிவாய |

ஸந்ததாச்ரிதவ்யதா2 விதா3ரிணே நம: சிவாய

       ஜந்துஜாதநித்யஸௌக்2யகாரிணே நம: சிவாய ||                       26

   கூற்றுவனுக்கும் கூற்றுவனாயும் பாபத்தைப் போக்குகின்றவனாயுமுள்ள சிவனுக்கு வணக்கம்; மேலான மக்கள் சொரூபனாயும் யானைத்தோலை தரிக்கின்றவனாயுமுள்ள சிவனுக்கு வணக்கம்; என்றும் தன்னிடம் புகலடைவோரின் துன்பத்தைப் போக்குகின்ற சிவனுக்கு வணக்கம்; எல்லா உயிர் வர்க்கங்களுக்கும் என்றும் நலம் புரிகின்ற சிவனுக்கு வணக்கம்.

 சூலினே நமோ நம: கபாலினே நம: சிவாய

       பாலினே விரிஞ்சிமுண்ட3 மாலினே நம: சிவாய |

லீலினே விசேஷருண்ட3 மாலினே நம: சிவாய

       சீலினே நம : ப்ரபுண்யசாலினே நம: சிவாய ||                          27

   சூல மேந்தியவனே வணக்கம்; கபாலமேந்திய சிவனுக்கு வணக்கம்; காத்தற்றொழிலைச் செய்பவனே, பிரமனின் ஓட்டுமாலை யணிந்தவனே, சிவனாகிய உமக்கு வணக்கம்; திருவிளையாடல் புரிகின்றவனே, விசேடமான கபந்தமாலை யணிந்தவனே, சிவனாகிய உமக்கு வணக்கம்; சீலம் பொருந்தியவனே வணக்கம்; மிகுதியும் புண்ணியசாலியாகிய சிவனுக்கு வணக்கம்.

 சிவபஞ்சாக்ஷரமுத்3ரா சதுஷ்பதோ3ல்லாஸ பத்3யமணிக3டிதாம் |

       நக்ஷத்ரமாலிகாம் இஹ த34து3பகண்ட2ம் நரோ பவேத்-ஸோம: || 28

     எந்த ஒரு மனிதன் சிவபஞ்சாக்ஷரமான 'நமசிவாய' எனும் மந்திரத்தை முத்திரையாக ஒவ்வொரு அடியிலும் கொண்டதும், இரத்தினங்கள் போன்ற (இருபத்தேழு) பாக்களால் அமைக்கப்பெற்றதுமான இந்த நக்ஷத்திர மாலையை தனது கண்டத்தில் அணிகின்றானோ அவன் உமையொரு பாகனான சிவனே ஆவான்.


No comments:

Post a Comment