Showing posts with label யதிபஞ்சகம். Show all posts
Showing posts with label யதிபஞ்சகம். Show all posts

Saturday, November 7, 2020

 யதிபஞ்சகம்

(ஸந்நியாஸிகளின் மஹாபாக்யத்தை வியந்து ஐந்து சுலோகங்களால் விளக்குகிறது இந்தப் பிரகரணம்.)

 வேதா3ந்தவாக்யேஷு ஸதா3 ரமந்தோ

       பிக்ஷாந்தமாத்ரேண ச துஷ்டிமந்த: |

விசோகமந்த: கரணே ஸ்மரந்த:

       கௌபீநவந்த: க2லு பா4க்3யவந்த: ||                                      1

       உபநிஷத்துக்களிலுள்ள வாக்யங்களில் எப்பொழுதும் ஆனந்தம் அடைபவர் களும், பிக்ஷையில் கிடைக்கும் ஆஹாரத்தினாலேயே ஸந்தோஷப்படுபவர்களும், சோகமற்ற (தாக உபநிஷத்தில் கூறப்பட்ட ஆத்ம) வஸ்துவையே உள்ளத்தில் நினைப்பவர்களுமான கௌபீனவான்கள் (துறவிகள்) அன்றோ பாக்யசாலிகள்?

 மூலம் தரோ: கேவலமாச்ரயந்த:

       பாணித்3வயம் போ4க்துமமத்ரயந்த: |

ந்தா2மிவ ஸ்ரீமபி குத்ஸயந்த:

       கௌபீநவந்த: க2லு பா4க்3யவந்த: ||                                      2

       மரத்தினடியை மட்டும் இருப்பிடமாகக் கொண்டவர்களும், இரு கைகளையும் சாப்பிடுவதற்குப் பாத்திரமாகக் கொண்டவர்களும், கந்தையைப் போல செல்வத்தையும் வெறுக்கிறவர்களுமான கௌபீன தாரிகளன்றோ பாக்யசாலிகள்?

 தே3ஹாதிபா4வம் பரிமார்ஜயந்த:

       ஆத்மாநமாத்மயவலோகயந்த: |

நாந்தர் ந மத்4யம் ந ப3ஹி: ஸ்மரந்த:

       கௌபீநவந்த: க2லு பா4க்ய3வந்த: ||                                      3

       சரீரம் முதலியவைகளில் உணர்ச்சியை முழுதும் துடைத்து (போக்கி)க் கொண்டவர்களும், மனத்தில் ஆத்ம வஸ்துவைப் பார்க்கின்றவர்களும், உள்ளேயும், நடுவேயும், வெளியிலும் (வேறெதுவும்) நினைக்காதவர்களுமான கௌபீன தாரியரன்றோ பாக்யசாலிகள்?

 ஸ்வாநந்த3-பா4வே பரிதுஷ்டிமந்த:

       ஸம்சாந்த ஸர்வேந்த்3ரிய த்3ருஷ்டிமந்த: |

அஹர் நிசம் ப்3ரஹ்மணி யே ரமந்த:

       கௌபீநவந்த: க2லு பா4க்3யவந்த: ||                                      4

       எவர்கள் ஆத்மாவான தன தேயான ஆனந்த ஸ்வரூபத்தில் நன்னிறைவைப் பெற்றவராகவும், எல்லா இந்திரியங்களின் நுகர்ச்சியும் அடங்கியவர்களாகவும், இரவும் பகலும் ப்ரஹ்மத்திலேயே களிப்புறுகின்றவர்களுமாக (இருக்கின்றனரோ, அந்த) கௌபீன தாரியரேயன்றோ பாக்யசாலிகள்?

 பஞ்சாக்ஷரம் பா4வநமுச்சரந்த:

       பதிம் பசூநாம் ஹ்ருதி3 பாவயந்த: |

பி4க்ஷாசநா தி3க்ஷ பரிப்4ரமந்த:

       கௌபீநவந்த: க2லு பா4க்3யவந்த: ||                                      5

       பரிசுத்தியைக் கொடுக்கும் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபித்துக்கொண்டும், மனத்தில் பசுபதியான பரமேசுவரனை தியானம் செய்துக்கொண்டும், பிக்ஷை எடுத்துக் கிடைக்கும் அன்னத்தை உண்பவர்களாய், திசைகள் எங்கும் சுற்றிக் கொண்டும் இருக்கிற கோவணாண்டிகளல்லவா பாக்யசாலிகள்?